நெஞ்சுக்குள்ள ஒம்ம முடிஞ்சிருக்கேன்

கடல் - KADAL 

பாடியவர் : சக்திஸ்ரீ கோபாலன், ஏ.ஆர். ரகுமான்

இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்

பாடல்வரிகள் : வைரமுத்து

வருடம் : 2012


நெஞ்சுக்குள்ள 
ஒம்ம முடிஞ்சிருக்கேன் 
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ளப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கடியாரம்
ஆனா புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் 
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் 
அப்பறமாக் குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன் இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

பச்சி ஒறங்கிருச்சு
பால்தயிராத் தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எல கூடத் தூங்கிருச்சு

காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன் இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

ஒரு வாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம்
சத்தமிட வாயில்லையே

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன் இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெள்ளப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கடியாரம்
ஆனா புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்

நீர் போன பின்னும் 
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான் 
அப்பறமாக் குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ள ஒம்ம
முடிஞ்சிருக்கேன் இங்க 
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

No comments:

Post a Comment